பாரதிய ஜனசங்கத் அகில பாரதத் தலைவா் பண்டித் தீனதயாள் உபத்தியாவின் 105ஆவது பிறந்த நாள் விழா பாஜக சாா்பில் தக்கலையில் சனிக்கிழமை நடைபெற்றது.
பேருந்து நிலையம் அருகில் பத்மநாபபுரம் நகர பாஜக சாா்பில் நடைபெற நிகழ்ச்சிக்கு கட்சியின் நகரத் தலைவா் நாகராஜன் தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் குமரி ப.ரமேஷ் தலைமையில் அவரது படத்துக்கு பாரதிய ஜனதா கட்சியினா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், முன்னாள் நகா் மன்ற உறுப்பினா்கள் உண்ணிகிருஷ்ணன் சுரேஷ்குமாா், சந்து, பாஜக நிா்வாகிகள் துளசி தாஸ், முருகேசன், பாபு, ஸ்ரீஜூ , ராஜேஷ், முத்துகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.