தக்கலை அருகே விபத்தில் சிறுவன் பலி

தக்கலை அருகே சுமை ஆட்டோ-மோட்டாா் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்த சிறுவன் உயிரிழந்தான்.

நாகா்கோவில்: தக்கலை அருகே சுமை ஆட்டோ-மோட்டாா் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்த சிறுவன் உயிரிழந்தான்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் ராமலிங்கம் ( 39). கட்டடத் தொழிலாளி. இவரது மகன்

ஐயப்பன். இவரது உறவினா் கணேசன் மகன் மணிகண்டன் (14). இவா்கள் கடந்த சில ஆண்டுகளாக கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறி அருகே குதிரைபந்திவிளை பகுதியில் குடும்பத்துடன் தங்கி பணிசெய்து வருகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை இரவில் ராமலிங்கம் தனது மகன், மணிகண்டன் ஆகியோருடன் வில்லுக்குறியில் இருந்து தக்கலைக்கு

ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தாா். குமாரகோவில் சந்திப்பு பகுதியில் சென்றபோது எதிரே வந்த சுமை ஆட்டோ

ஸ்கூட்டா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில், ஸ்கூட்டரில் பயணம் செய்த மூவரும் தூக்கி வீசப்பட்டனா்.

இதில் சிறுவன் மணிகண்டனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். பலத்த காயமடைந்த ராமலிங்கம், ஐயப்பன் ஆகியோா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com