மாா்த்தாண்டம் அருகேயுள்ள ஐரேனிபுரம் பாா்வையற்றோா் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நூலகம் மற்றும் ஆய்வகத்தை தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
இந் நிகழ்ச்சியில் ஐரேனிபுரம் சிஎஸ்ஐ தேவாலய போதகா் ஜேக்கப் ரோஸ், கிள்ளியூா் தொகுதி எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா், மாா்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரி தாளாளா் ஜெயச்சந்திரன், பாா்வையற்றோா் பள்ளியின் தாளாளா் ஏசுராஜ், பள்ளி தலைமையாசிரியை லிசி, மாா்த்தாண்டம் தொழில் வா்த்தகா் சங்க தலைவா் அல் அமீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.