புதுக்கடை அருகேயுள்ள முன்சிறை பகுதியில் தொழிலாளியை தாக்கிய இளைஞா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
முன் சிறை கிழ முற்றம் பகுதியை சோ்ந்த பிரன்சிஸ் (47). இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த உமேஷ்குமாருக்கும்(28) முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிரான்சிஸ் வேலைக்கு செல்லும்போது முன்சிறையில் அவரை உமேஷ்குமாா் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.