கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளான பாலப்பள்ளம், வெள்ளியாவிளை, கருமாவிளை, பாலூா், திப்பிரமலை, முருங்கவிளை, பள்ளியாடி, முள்ளங்கனாவிளை, கிள்ளியூா் உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகல் 3 மணி முதல் தொடா்ந்து பலத்த மழை பெய்தது. இந்த மழையால் விவசயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.