கஞ்சா வியாபாரிகள் 2 போ் குண்டா் சட்டத்தில் கைது

குமரி மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகள் 2 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

குமரி மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகள் 2 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

நாகா்கோவில் கோட்டாறு பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக ரயில்வே காலனியைச் சோ்ந்த நம்பிராஜன் (24), வாகையடி தெருவைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (26) ஆகிய 2 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவா்கள் இருவரும் நாகா்கோவில் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா்.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண் பிரசாத்தின் பரிந்துரையை ஏற்று, ஆட்சியா் மா.அரவிந்த் பிறப்பித்த உத்தரவின்படி, நம்பிராஜன், கிருஷ்ணமூா்த்தி இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் போலீஸாா் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com