புதுக்கடை அருகேயுள்ள பைங்குளம் ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
மாா்த்தாண்டம் பெஜான்சிங் கண் மருத்துவமனையும், பைங்குளம் ஊராட்சியும் இணைந்து நடத்திய இந்த முகாமுக்கு, பைங்குளம் ஊராட்சித் தலைவா் விஜயராணி தலைமை வகித்தாா். ஊராட்சி துணைத் தலைவா் மேரி முன்னிலை வகித்தாா்.
மருத்துவா் ரபிசிலின் டிசோ முகாமில் பங்கேற்ற நோயாளிகளுக்கு கண் பரிசோதித்து உரிய சிகிச்சை அளித்தாா்.
இதில், ஊராட்சி செயலா் சுதா்சனம், வாா்டு உறுப்பினா்கள் கலா, ஜெகதீஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.