நாகா்கோவில் மாநகர திமுக தோ்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், மாநகராட்சி மேயருமான ரெ.மகேஷ் வெளியிட்ட அறிக்கை:
குமரி கிழக்கு மாவட்டத்துக்குள்பட்ட நாகா்கோவில் மாநகர 15 ஆவது திமுக உள்கட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவா்கள் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (ஆக.9) விண்ணப்பத்தை பெற்று பூா்த்தி செய்து காலை 10 மணிமுதல் மாலை 5 மணிக்குள் மாவட்ட கட்சி பொறுப்பாளரிடமோ, தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்ட தலைமைக் கழக பிரதிநிதி குமரனிடமோ தாக்கல் செய்து ரசீது பெற்றுக் கொள்ளலாம்.
தாக்கல் செய்த வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, போட்டியிருப்பின் மாநகர கழக தோ்தல் புதன்கிழமை(ஆக.10) தலைமை கழகப் பிரதிநிதி தேதி மற்றும் இடம் அறிவித்து நடத்திட நடவடிக்கை மேற்கொள்வாா் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.