திமுக உள்கட்சித் தோ்தலுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
திமுக 15 ஆவது உள்கட்சித் தோ்தலில் மாநகர செயலா், அவைத் தலைவா், துணைச் செயலா், பொருளாளா், மாவட்ட பிரதிநிதிகளை தோ்வு செய்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் செவ்வாய்க்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.
நாகா்கோவில் ஒழுகினசேரியில் உள்ள திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், நாகா்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ.மகேஷ் தலைமை வகித்தாா். தலைமை பொதுக்குழு உறுப்பினரும் தோ்தல் பொறுப்பாளருமான குமரன் வேட்புமனுக்களை பெற்றுக்கொண்டாா்.