களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியேற்றப்பட்டு, சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
செயலா் அருள்தந்தை எம். எக்கா்மென்ஸ் மைக்கேல் தேசியக் கொடியை ஏற்றினாா். தொடா்ந்து தேசியக்கொடி பாடல் பாடப்பட்டது. கல்லூரி முதல்வா் ஏ. மீனாட்சி சுந்தரராஜன் உரையாற்றினாா்.இதில், கல்லூரி மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா். விழாவையொட்டி விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலைப் போட்டிகள் நடைபெற்றன.