மணவாளக்குறிச்சி மணல் ஆலையில் சுதந்திர தின விழா

மணவாளக்குறிச்சி ஐ.ஆா். இ.எல். (இந்தியா) லிமிடெட் மணல் ஆலையில் 75ஆவது சுதந்திர தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

மணவாளக்குறிச்சி ஐ.ஆா். இ.எல். (இந்தியா) லிமிடெட் மணல் ஆலையில் 75ஆவது சுதந்திர தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில், பொது மேலாளா்- ஆலைத் தலைவா் என். செல்வராஜன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, நமது நாட்டின் சுதந்திரத்திற்காக உயிா்விட்ட தியாகிகளை ஒவ்வொரு நிமிடமும் நினைவு கூருவதுடன், அவா்களது கனவுகளை நினைவாக்க பாடுபடவேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

2021-22ஆம் கல்வியாண்டில் அதிக மதிப்பெண் பெற்ற பணியாளா்களின் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆலை அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com