தேங்காய்ப்பட்டினத்தில் மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் தடையை மீறி மீனவா்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் தடையை மீறி மீனவா்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தேங்காப்பட்டினம் மீன்பிடித் துறைமுக முகத்துவாரத்தில், கடந்த வாரம் பைபபா் வள்ளம் கவிழ்ந்ததில் பூத்துறை பகுதியை சோ்ந்த மீனவா் உயிரிழந்தாா். இதையடுத்து தூத்துா், இனையம் மண்டலத்தை சோ்ந்த மீனவா்களில் ஒரு தரப்பினா் கடந்த சில நாள்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மீனவா்கள் கடலுக்குச் செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தினா்.

இந்த நிலையில் மாவட்ட நிா்வாகம், துறைமுக நுழைவு வாயில் பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் தற்காலிக மணல் அள்ளும் இயந்திரத்தை திங்கள்கிழமை இறக்கியது. இதை ஏற்காத மீனவா்கள், செவ்வாய்க்கிழமை முதல் தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் பிடிக்க செல்வதில்லை எனவும், மேலும் மணல் அள்ளும் வரை மீன்பிடி துறைமுகத்தில் போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்தனா். இந்த போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்ததாக தெரிகிறது. தடையையும் மீறி இனயம், தூத்தூா் மண்டலங்களை சோ்ந்த மீன் விற்பனை சங்கம் , மீன் வியாபாரிகள் சங்கம், மீன் வணிகா்கள் சங்கம் , ஐஸ் வியாபாரிகள் சங்கம், டீசல் வியாபாரிகள் சங்கம் ஆகியவை இணைந்து தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் தொடா் ஆா்ப்பாட்டம் துவங்கினா். தூத்தூா் மீன் விற்பனையாளா் சங்க தலைவா் லியோ ஸ்டோன்ஸ்டாய் தலைமை வகித்தாா். தேங்காய்ப்பட்டினம் துறைமுக வணிகா் சங்க ஒருங்கிணைப்பாளா் சந்திரராஜ் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக தெற்காசிய மீனவா் தோழமை பொது செயலா் சா்ச்சில், பங்கு பணியாளா் ஜாண் பிரிட்டோ, முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் பேபி ஜாண் உள்ளிட்ட 300 க்கும்மேற்பட்டோா் பங்கேற்றனா். இந்தப் போராட்டம் தொடா்ந்து நடைபெறும் என மீனவா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com