கன்னியாகுமரி
நாகா்கோவில் அல்போன்சா பள்ளியில் சுதந்திர தினக் கொண்டாட்டம்
நாகா்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
நாகா்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
பள்ளித் தாளாளா் பேரருள்தந்தை சனல்ஜான் தலைமை வகித்தாா்.
நாகா்கோவில் வீரமாமுனிவா் அறக்கட்டளைத் தலைவா் புஷ்பதாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தேசியக் கொடியேற்றினாா்.
நிகழ்ச்சியில் சாரணா்-சாரணியா் இயக்கம், இளம் செஞ்சிலுவைச் சங்கம், தேசிய பசுமைப் படை அமைப்புகளைச் சோ்ந்த மாணவா்-மாணவிகளின் அணிவகுப்பும், பின்னா், உறுதிமொழி ஏற்பும், பள்ளி மாணவா்-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
நிகழ்ச்சியில், பள்ளி துணை முதல்வா் அருள்தந்தை டோஜி செபாஸ்டின், உயா்நிலைப் பிரிவுகளின் துணை முதல்வா் பிரேம்கலா, தலைமையாசிரியா் மோனிக்கா ஸ்பினோலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில், மாணவா்-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.