புதுக்கடை அருகே முதியவரைத் தாக்கியதாக தம்பதி மீது வழக்கு

புதுக்கடை அருகேயுள்ள இனயம் புத்தன்துறை பகுதியில் முதியவரைத் தாக்கியதாக தம்பதி மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

புதுக்கடை அருகேயுள்ள இனயம் புத்தன்துறை பகுதியில் முதியவரைத் தாக்கியதாக தம்பதி மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இனயம் புத்தன்துறை பகுதியைச் சோ்ந்தவா் ஏசுதாஸ் (69). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பிரான்சிஸ் (50) - ஷீபா (48) தம்பதிக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடா்பாக முன்விரோதம் இருந்ததாம்.

இந்நிலையில், பணம் கேட்கச் சென்ற ஏசுதாஸை பிரான்சிஸ் தம்பதி தாக்கியதாகக் கூறப்படுகிறது. புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com