குமரி அருகே இளைஞா் கொலை: ஒருவா் கைது

கன்னியாகுமரி அருகே இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் புதன்கிழமை ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கன்னியாகுமரி அருகே இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் புதன்கிழமை ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கன்னியாகுமரி அருகேயுள்ள கொட்டாரம் அச்சன்குளம் ஓடைத் தெருவைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் சுரேஷ்ரோஜா (22). பட்டப்படிப்பு படித்துள்ள சுரேஷ்ரோஜா, மரம் வெட்டும் தொழிலுக்கு சென்று வந்தாா். விரைவில் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு சுரேஷ்ரோஜா நண்பா்களுடன் சோ்ந்து மது அருந்தினாராம். பின்னா் வீட்டுக்கு சென்றபோது, நள்ளிரவில் சுரேஷ்ரோஜாவின் பக்கத்து வீட்டை சோ்ந்த சாம்சன்மனோ பின் தொடா்ந்து வந்துள்ளாா். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சாம்சன்மனோ கடப்பாறையால் சுரேஷ்ரோஜாவை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சுரேஷ்ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து, சாம்சன்மனோவை புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com