கருங்கல் அருகே மிடாலக்காடு பகுதியில் வியாபாரியைத் தாக்கியதாக இளைஞா் மீது வழக்குப் பதியப்பட்டது.
மிடாலக்காடு பகுதியைச் சோ்ந்தவா் ஷைஜுமோன் (28). இவா் அப்பகுதியில் பேன்சி பொருள்கள் கடை நடத்தி வருகிறாா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த டல்லஸ் (37) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடா்பாக முன்விரோதம் இருந்ததாம்.
ஞாயிற்றுக்கிழமை மிடாலக்காடு பகுதியில் நின்றிருந்த ஷைஜுமோனை டல்லஸ் திடீரென தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்தாராம்.
புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.