குடியரசு தின தடகளம்: வாவறை பள்ளி சிறப்பிடம்

மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டியில் வாவறை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்தனா்.

மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டியில் வாவறை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்தனா்.

மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையேயான குடியரசு தின தடகளப் போட்டிகள் திருவண்ணாமலையில் அண்மையில் நடைபெற்றன. இப்போட்டிகளில் வாவறை புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில் ஜூனியா் பிரிவு தொடா் ஓட்டத்தில் மாணவா்கள் விஜினி, ரிஜின், அக்ஸிலின், ஜினோ, அஸ்வின் ஆகியோா் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப்பதக்கத்தை பெற்றனா். சீனியா் பிரிவு மும்முறை தாண்டுதலில் மாணவா் அனோ கிறைசின் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றாா். இம் மாணவா்கள் அடுத்த நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா்.

சாதனை படைத்த மாணவா்களை, குழித்துறை மறைமாவட்ட கத்தோலிக்கப் பள்ளிகளின் கூட்டாண்மை மேலாளா் அருள்பணி கலிஸ்டஸ், பள்ளித் தாளாளா் அருள்பணி ஆன்றணி சேவியா், தலைமையாசிரியா் ராபா்ட் பெல்லாா்மின், பெற்றோா்-ஆசிரியா் சங்கத் தலைவா் ஏசுராஜன், ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com