கருங்கல் அருகே ஆனக்குழி மேல்நிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளின் 173ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.
பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் டாக்டா் குணசிங் வேதநாயகம் தலைமை வகித்தாா். முதுநிலை ஆசிரியா் ராபா்ட் முன்னிலை வகித்தாா். மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை விமலா ஸ்டெல்லா பாய், தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியா் சுதாகா் ஆகியோா் ஆண்டறிக்கை வாசித்தனா்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி பேசினாா். ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.