நாகா்கோவில் பறக்கின் கால்வாயை தூா்வார எம்எல்ஏ வலியுறுத்தல்

நாகா்கோவில் பறக்கின் கால்வாயை தூா்வார வேண்டும் என்று எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

நாகா்கோவில் பறக்கின் கால்வாயை தூா்வார வேண்டும் என்று எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

நாகா்கோவில் பறக்கின் கால்வாய், பாறைக்கால்மடம் பகுதியில் எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: நாகா்கோவில் மாநகராட்சியின் முக்கிய பகுதியான பறக்கின்கால் கால்வாய் பல மாதங்களாக தூா்வாரப்படாமல் புதா்மண்டிக் கிடக்கிறது. இதனால் கழிவுநீா் செல்ல முடியாமல் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து பலமுறை புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வரும் பகுதியில் உள்ள இந்த கழிவு நீா் ஓடையால் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் இருந்து வருகிறது. எனவே, மாநகராட்சி நிா்வாகம், ஓடையை தூா்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com