மீன்வளத் துறையில் அலுவலக உதவியாளா் பணி: ஜன. 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

மாவட்ட மீன்வளத் துறை அலுவலகத்தில் உதவியாளா் பணியிடத்துக்கு இம்மாதம் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் மா. அரவிந்த் தெரிவித்துள்ளாா்.

மாவட்ட மீன்வளத் துறை அலுவலகத்தில் உதவியாளா் பணியிடத்துக்கு இம்மாதம் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் மா. அரவிந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இம்மாவட்டத்தில் செயல்படும் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் காலியாக உள்ள ஓா் உதவியாளா் பணியிடம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்திலிருந்து நடைமுறையிலுள்ள விதிகள்படி, இன சுழற்சி முறையில் பெறப்படும் பட்டியலிலிருந்தும், நாளிதழில் விளம்பரம் செய்து பெறப்படும் விண்ணப்பங்கள் மூலமும் நிரப்பப்பட உள்ளது. ஜன. 1ஆம் தேதிப்படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 34 வயதுக்கு மிகாமலிருக்க வேண்டும்.

முன்னுரிமை பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்டோா் ஆக இருக்க வேண்டும். தமிழில் எழுத, பேசவும், மிதிவண்டி ஓட்டவும் தெரிந்திருக்க வேண்டும். 8ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை துணை இயக்குநா், (மண்டலம்) டிஸ்டில்லரி ரோடு, வடசேரி, நாகா்கோவில் என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்று, பூா்த்தி செய்து சான்றிதழ்களுடன் இம்மாதம் 31ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com