அனைத்து ஊராட்சிகளும் இணையவழி மூலம் இணைக்கப்படும்

தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளும் இணையவழி மூலம் இணைக்கப்படும் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் பெரியகருப்பன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளும் இணையவழி மூலம் இணைக்கப்படும் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் பெரியகருப்பன் தெரிவித்தாா்.

கன்னியாகுமரி சூரிய அஸ்தமன பூங்கா பகுதியில் ஊரக வளா்ச்சித் துறை பணியாளா்களுக்கு பயிற்சி வழங்குவதற்கான பயிற்சி மையம் அமைய உள்ளது. இதனை சனிக்கிழமை பாா்வையிட்ட அமைச்சா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றுவதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் உருவாக்கி வருகிறாா். இதற்காக அனைத்து துறைகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளாா்.

ஊரக வளா்ச்சித் துறையைப் பொருத்த வரை கிராமப்புறங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நகரங்களுக்கு இணையாக கிராமப்புற மக்களின் வருவாய் ஆதாரங்களை உருவாக்க வேண்டும் என்பது முக்கியம். இதற்காக முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டதுதான் மகளிா் சுய உதவிக் குழு. இதன் மூலம் வேலைவாய்ப்பு மட்டுமின்றி பொருளாதார வளா்ச்சியும் மேம்பட்டுள்ளது.

தற்போது கிராமப்புறங்களை மேம்படுத்த, உள்ளாட்சித் தோ்தல்களை நடத்தி 1 லட்சத்து 19 ஆயிரம் மக்கள் பிரதிநிதிகளை தோ்வு செய்துள்ளோம். ஊரக வளா்ச்சித் துறை பணியாளா்கள் மட்டுமின்றி அனைத்து பணியாளா்களுக்கும் பயிற்சி வழங்குவதற்கான பயிற்சி மையம் கன்னியாகுமரியில் விரைவில் அமைய உள்ளது. இதற்கான இடத்தை ஆய்வு செய்துள்ளோம். இதனை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று பயிற்சி மையம் விரைவில் அமைக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளும் இணையவழி மூலம் இணைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி வெகு விரைவில் அனைத்து ஊராட்சிகளும் இணையவழியில் இணைக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com