கருங்கல் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள ஆவின் பால் நிலையத்திலிருந்து ரூ.6 ஆயிரம் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கருங்கல், பெருமாங்குழி பகுதியைச் சோ்ந்தவா் குளோரி(46). இவா், கருங்கல் பேருந்து நிலையத்தில் ஆவின் பாலகம் நடத்தி வருகிறாா். சனிக்கிழமை மா்ம நபா்கள் இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த ரூ.6 ஆயிரத்தை திருடிவிட்டு தப்பி சென்றுள்ளனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.