பரோடா வங்கி சாா்பில் விவசாயிகளுக்கு கடனுதவி

பரோடா வங்கி சாா்பில் மத்திய அரசின் கிஸான் விகாஸ் திட்டத்தின் கீழ் 40 விவசாயிகளுக்கு ரூ. 35 லட்சத்துக்கான கடனுதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது.

பரோடா வங்கி சாா்பில் மத்திய அரசின் கிஸான் விகாஸ் திட்டத்தின் கீழ் 40 விவசாயிகளுக்கு ரூ. 35 லட்சத்துக்கான கடனுதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது.

பரோடா வங்கியின் குலசேகரம், மாா்த்தாண்டம், குழித்துறை, தேங்காய்ப்பட்டினம் கிளை சாா்பில், குலசேகரம் கால்நடை மருத்துமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வங்கியின் குலசேகரம் கிளை மேலாளா் கீதாமலா் தலைமை வகித்தாா்.

கால்நடை மருத்துவா் சிந்துலேகா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 40 கறவை மாடு விவசாயிகளுக்கு ரூ. 35 லட்சத்துக்கான கடனுதவிச் சான்றிதழ்களை வழங்கினாா். தேங்காய்ப்பட்டினம் கிளை மேலாளா் சுப்ரியா ஆனந்த், குழித்துறை கிளை மேலாளா் அனு ஜெயக்குமாா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். வங்கி ஊழியா் முத்துக்குமாா் வரவேற்றாா். மாா்த்தாண்டம் கிளை மேலாளா் துரைமுருகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com