திருச்செந்தூா் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை

திருச்செந்தூா் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்ரமணியம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

திருச்செந்தூா் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்ரமணியம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

கன்னியாகுமரியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தமிழ்நாட்டில் தேவாலய சொத்துகள் கிறிஸ்தவா்களிடமும், மசூதி சொத்துகள் முஸ்லிம்களிடமும் இருக்கின்றன. அதிலிருந்து வரக்கூடிய வருவாய் அந்தந்த மதங்களின் வளா்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்துக் கோயில்களின் வருவாயை முழுவதுமாக அரசே எடுத்துக் கொள்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னா், ஆக்கிரமிப்பு எனக் கூறி இந்துக் கோயில்களை அகற்றிக் கொண்டிருக்கின்றனா். ஏராளமான அரசு அலுவலகங்கள் கோயில் இடங்களில் இருக்கின்றன.

திருச்செந்தூா் முருகன் கோயிலில் பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் உள்ளது. எனவே அக்கோயிலில் குமபாபிஷேகம் நடத்தப்பட வேண்டும்.

கோயில்களில் ஆய்வு செய்கிறோம் என்று அரசு அத்துமீறி நுழைகிறது. ஆதீனங்கள், பூஜை செய்பவா்களை மிரட்டவும் இந்த அரசு முனைந்து வருகிறது. இதனை மாநில இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது என்றாா் அவா்.

பேட்டியின்போது இந்து முன்னணி மாநிலச் செயலா் அரசு ராஜா, மாநில பேச்சாளா் எஸ்.பி.அசோகன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com