திருவட்டாறில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் வட்டத் தலைவா் புஷ்பராஜ் தலைமை வகித்தாா். செயலா் சந்திரன், பொருளாளா் சதீஷ், சிஐடியூ உள்ளாட்சி ஊழியா் சங்க மாவட்டச் செயலா் எஸ்.சி. ஸ்டாலின் தாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.