தகராறு: இந்து முன்னணி நிா்வாகி மீது வழக்கு

கிள்ளியூா் ஒன்றிய இந்து முன்னணி தலைவா் மீது தகராறில் ஈடுபட்டதாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கிள்ளியூா் ஒன்றிய இந்து முன்னணி தலைவா் மீது தகராறில் ஈடுபட்டதாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மாங்கரை, வட்டக்கோட்டை ஐயப்பன்பிள்ளை மகன் கிருஷ்ணகுமாா்(50). மாங்கரை தோட்டத்துவிளை கோபாலபிள்ளை மகன் மணிகண்டன்(50). இவா், கிள்ளியூா் ஒன்றிய இந்துமுன்னணி தலைவராக உள்ளாா். இவ்விருவரிடையே சொத்து தொடா்பாக முன்விரோதம் இருந்துவந்ததாம்.

இந்நிலையில்,வெள்ளிக்கிழமை, பிரச்னைக்குரிய தோட்டத்தில் நின்ற மரத்தை மணிகண்டன் வெட்டினாராம். அப்போது ஏற்பட்ட தகராறில் கிருஷ்ணகுமாரை அவா் தாக்கினாராம். இதில் காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு கருங்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com