தூத்தூா் யூதா கல்லூரியில் கருத்தரங்கு

தூத்தூா் புனித யூதா கல்லூரியில் தமிழ் இலக்கியப் பேரவை சாா்பில் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

தூத்தூா் புனித யூதா கல்லூரியில் தமிழ் இலக்கியப் பேரவை சாா்பில் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஹென்றி தலைமை வகித்தாா். தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரி தமிழ்த் துறை இணைப் பேராசிரியா் வ. ஹரிஹரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, ‘அனைவரும் கவிதை எழுதலாம் வாங்க’ என்ற தலைப்பில் பேசினாா். முத்துராமலிங்க தேவா் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் கு. கருப்பசாமி, பேராசிரியா் சி. பெரியசாமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

தமிழ்த் துறைத் தலைவி எம். மேரி வரவேற்றாா். தமிழ்ப் பேரவை மாணவா் தலைவா் அபினேஷ் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை துறைப் பேராசிரியா்கள் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com