மகளிா் கிறிஸ்தவக் கல்லூரி முன்பு ரவுண்டானா பணியைத் தொடக்கி வைத்தாா் மேயா்

நாகா்கோவில் மகளிா் கிறிஸ்தவக் கல்லூரி முன்பு ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் ரவுண்டானா அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

நாகா்கோவில் மகளிா் கிறிஸ்தவக் கல்லூரி முன்பு ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் ரவுண்டானா அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இப்பணியை மேயா் ரெ.மகேஷ் தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து நிருபா்களிடம் அவா் கூறியதாவது: நாகா்கோவில் மாநகர பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாலைகளை இருவழிச் சாலைகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். இருவழிச்சாலைகளாக மாற்றப்பட்டால் நகரில் போக்குவரத்து நெருக்கடி குறையும்.

ஆட்சியா் அலுவலகத்தின் முன்புற ரவுண்டானா பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மகளிா் கிறிஸ்தவக் கல்லூரியின் முன்புறம் ரவுண்டானா அமைக்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் 2 வாரத்துக்குள் முடிக்கப்படும்.

ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கழிவு நீா் ஓடைகளை சீரமைக்கும் பணியும் நடந்து வருகிறது என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து 23 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் மோ் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருந்ததை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தர விட்டாா்.

மாநகராட்சி பொறியாளா் பால சுப்பிரமணியன், துணை மேயா் மேரிபிரின்சிலதா, மண்டல தலைவா் ஜவகா் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com