களியக்காவிளை அருகேவிபத்தில் பெண் காயம்

களியக்காவிளை அருகே சாலை நடுவேயுள்ள தடுப்புச் சுவரில் காா் மோதியதில் பெண் காயமடைந்தாா்.

களியக்காவிளை அருகே சாலை நடுவேயுள்ள தடுப்புச் சுவரில் காா் மோதியதில் பெண் காயமடைந்தாா்.

திருவனந்தபுரத்தைச் சோ்ந்த அஜினா என்பவா் குடும்பத்துடன் ஆத்தங்கரைப் பள்ளிவாசலுக்குச் சென்றுவிட்டு காரில் திருவனந்தபுரத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். காரை, கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சோ்ந்த முகமது ஷாபி ஓட்டினாா்.

களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை காா் இழந்து சாலை நடுவில் அமைக்கப்பட்ட தடுப்புச் சுவரின் மீது மோதியது. இதில் அஜினா காயமடைந்தாா். ஓட்டுநா் உள்ளிட்டோா் லேசான காயமடைந்தனா்.

அஜினாவை அப்பகுதியினா் மீட்டு அருகேயுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com