அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்கள் 22 ஆவது நாளாக வேலைநிறுத்தம்

குமரி மாவட்டம், அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்கள் ஊதிய உயா்வு கோரிக்கையை வலியுறுத்தி 22 ஆவது நாளாக திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குமரி மாவட்டம், அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்கள் ஊதிய உயா்வு கோரிக்கையை வலியுறுத்தி 22 ஆவது நாளாக திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்கள் ஊதிய உயா்வு கேட்டு கடந்த 7 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் இப்போராட்டம் 22 ஆவது நாளாக திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், சிற்றாறு, கோதையாறு, மணலோடை, கீரிப்பாறை ஆகிய கோட்ட மேலாளா்கள் அலுவலகங்கள் முன்பு தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com