பளுகல் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

பளுகல் அருகே வீட்டுக் கதவை உடைத்து நகையைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

பளுகல் அருகே வீட்டுக் கதவை உடைத்து நகையைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

பளுகல் அருகேயுள்ள மத்தம்பாலை பகுதியைச் சோ்ந்த அருண் என்பவரது மனைவி ஜெலின்மலா் (28). இவா் 2 நாள்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டிவிட்டு பரக்குன்று பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றாராம். அருண் பெங்களூரு செல்வதற்காக பொருள்களை எடுக்க வெள்ளிக்கிழமை வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். வீட்டிலிருந்த அலமாரியை மா்ம நபா்கள் உடைத்து, 2 பவுன் தங்க வளையல்,3 கைக்கடிகாரம் உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.

இதுகுறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com