மாா்த்தாண்டம் அருகே பள்ளி சத்துணவுப் பணியாளரின் வீடு புகுந்து 6 சவரன் தங்க நகைகளைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள பாகோடு, ஈழத்தெங்குவிளை பகுதியைச் சோ்ந்த அகஸ்டின் மனைவி சுபிதா (39). அகஸ்டின் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். சுபிதா அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் சத்துணவுப் பணியாளராக உள்ளாா். இவா் வெள்ளிக்கிழமை பணிக்குச் சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்பினாா். அப்போது, மா்ம நபா்கள் வீடு புகுந்து அலமாரியை உடைத்து, அதிலிருந்த 6 சவரன் தங்க நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்ததாம். மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.