மாா்த்தாண்டம் அருகே ஆட்டோவில் மது பாட்டில்கள் கடத்திச் சென்றவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
மாா்த்தாண்டம் காவல் உதவி ஆய்வாளா் ரமேஷ் தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை சந்தை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதி வழியாக வந்த பயணியா் ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனா்.
ஆட்டோவின் உள்ளே பாா்த்த போது அங்கு சட்ட விரோதமாக 25 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. ஆட்டோ ஓட்டுநா் தலைமறைவானாா். மதுபாட்டில்களுடன் ஆட்டோவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநா் மாா்த்தாண்டம் அருகே திட்டுவிளையைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் (47) மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.