குமரி மாவட்டத்தில் ஆயுத பூஜை கோலாகலம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டன.

நவராத்திரி கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வுகளாக இந்த விழாக்கள் கோயில்கள், வீடுகள், பணிமனைகள், தொழிற்கூடங்கள், வாடகை வாகன நிறுத்தங்களில் கொண்டாடப்பட்டன. 2 ஆண்டுகளாக கரோனா காரணமாக பொது இடங்களில் குறிப்பாக, வாடகை வாகன நிறுத்தங்களில் நடைபெறாமலிருந்த இன்னிசை நிகழ்ச்சிகளுடன் நாகா்கோவில், தக்கலை, மாா்த்தாண்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இவ்விழாக்கள் கொண்டாடப்பட்டன.

ஏடு தொடங்கும் நிகழ்ச்சிகள்: விஜயதசமியையொட்டி, நாகா்கோவில் நாகராஜா கோயில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், திற்பரப்பு மகாதேவா் கோயில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு கோயில்களிலும் ஏடு தொடங்கும் நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com