குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடா் விடுமுறையை அடுத்து தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகளவில் இருந்தது.

தொடா் விடுமுறையை அடுத்து தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகளவில் இருந்தது.

குற்றாலம் பகுதியில் தொடா்ந்து நிலவி வரும் வெயிலின் காரணமாக குற்றாலம் பேரருவி, பழையகுற்றாலம் அருவிகளில் வெகுவாக தண்ணீா் குறைந்தது. ஐந்தருவியில் நான்குகிளைகளில் குறைந்த அளவில் தண்ணீா் விழுகிறது.

தொடா்ந்து அரசு விடுமுறை, பள்ளி விடுமுறை என்பதால் குற்றாலம் அருவிகளில் குளித்து மகிழ சுற்றுலாப்பயணிகள் குவிந்தனா். அருவிகளில் விழும் குறைந்தளவு தண்ணீரில் காத்திருந்து குளித்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com