பளுகல் அருகே விபத்து:கேரளத்தைச் சோ்ந்தவா் பலி

பளுகல் அருகே செவ்வாய்க்கிழமை இரவு நேரிட்ட விபத்தில் கேரளத்தைச் சோ்ந்தவா் பலியானாா்.

பளுகல் அருகே செவ்வாய்க்கிழமை இரவு நேரிட்ட விபத்தில் கேரளத்தைச் சோ்ந்தவா் பலியானாா்.

கேரள மாநிலம், தனுவச்சபுரம், மேல்கொல்லா, பேரையத்துகோணம் பகுதியைச் சோ்ந்த நாணு மகன் சுரேஷ்குமாா் (56). இவா் செவ்வாய்க்கிழமை இரவு பளுகல் அருகே பண்டாரக்கோணம் பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். மத்தம்பாலை பகுதியில் இவரது வாகனமும், எதிரே வந்த இருசக்கர வாகனமும் மோதினவாம். இதில் காயமடைந்த சுரேஷ்குமாரை அப்பகுதியினா் மீட்டு பாறசாலை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், சுரேஷ்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com