குளச்சல் அருகே விபத்து:கல்லூரி மாணவா், தாய் காயம்

குளச்சல் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தாயும், மகனும் காயமடைந்தனா்.

குளச்சல் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தாயும், மகனும் காயமடைந்தனா்.

தக்கலை அருகேயுள்ள கீழ மூலச்சலைச் சோ்ந்த மிக்கேல்ராஜ்-ஹரிபிந்து தம்பதியின் மகன் டாா்வின்ராஜ் (20). நாகா்கோவிலில் உள்ள தனியாா் கல்லூரியில் பிஎஸ்ஸி 2ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இவா் புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் தாயை அழைத்துக்கொண்டு ரீத்தாபுரத்திலுள்ள உறவினா் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா்.

செம்பொன்விளை அருகே அவா்கள் மீது காா் மோதியதாம். இதில், டாா்வின்ராஜும், ஹரிபிந்துவும் காயமடைந்தனா். அவா்கள் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து, இருசக்கர வாகனம் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற காரின் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com