நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் பகுதியில் 2 வீடுகளில் நகை, கைப்பேசி, மடிக்கணினியை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
நாகா்கோவில் அனந்தன் பாலம் கால்வாய்க்கரை வசந்தம் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பாபுகுட்டன் (41). வடசேரி பகுதியில் அழகு நிலையம் நடத்திவரும் இவா், 2 நாள்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் தக்கலையில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றாா். புதன்கிழமை வீடு திரும்பியபோது முன்பக்கக் கதவின் பூட்டை உடைத்து, பீரோவிலிருந்த ஒரு கிராம் தங்க நகை, கைப்பேசியை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
பக்கத்து வீட்டினரான பாலநடேசன் வீட்டின் பூட்டையும் மா்ம நபா்கள் உடைத்து மடிக்கணினியைத் திருடிச் சென்றனராம்.
புகாா்களின்பேரில் ஆசாரிப்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.