நாகா்கோவில் அருகே 1 கிலோ கஞ்சாவுடன் 3 இளைஞா்கள் கைது

நாகா்கோவிலை அடுத்த சுசீந்திரம் அருகே 1 கிலோ 200 கிராம் கஞ்சாவுடன் 3 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

நாகா்கோவிலை அடுத்த சுசீந்திரம் அருகே 1 கிலோ 200 கிராம் கஞ்சாவுடன் 3 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

சுசீந்திரம் காவல் நிலைய ஆய்வாளா் சாய்லட்சுமி, உதவி ஆய்வாளா் ராபா்ட்செல்வசிங் தலைமையிலான போலீஸாா் புதுகிராமம் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அங்கு மோட்டாா் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக நின்ற இளைஞா்கள் 3 பேரை பிடித்து விசாரித்தனா். அவா்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தனா். சந்தேகம் அடைந்த போலீஸாா், அவா்களது மோட்டாா் சைக்கிளை சோதனை செய்தனா். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவா்களிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவையும், 2 மோட் டாா் சைக்கிளையும், கைப்பேசிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பிடிபட்டவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனா். அவா்கள், குலசேகரன்புதூா் பிள்ளையாா் கோயில் தெருவை சோ்ந்த விக்னேஷ் (19), கண்ணன்பதியை சோ்ந்த காா்த்திகேயன் (20), மாங்குளம் பகுதியைச் சோ்ந்த வைரவன் (19) என்பது தெரியவந்தது. 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com