புதுக்கடை அருகே உள்ள முன்சிறை மேல்நிலைப்பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
முன்சிறை அரசு மேல்நிலைப் பள்ளி அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து, புதுக்கடை போலீஸாா் அங்கு சென்று விசாரித்தனா். அப்போது, அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற புதுக்கடை தவிட்டவிளை பகுதியை சோ்ந்த மோகன்தாஸ் மகன் அஜித்மொபின்(27) என்பவரை பிடித்து விசாரித்ததில் அவரிடம் விற்பனைக்காக 20 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.