கன்னியாகுமரி தூய அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவா்-மாணவிகள் 192 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு தாளாளா் ஆன்றனி அல்காந்தா் தலைமை வகித்தாா். கன்னியாகுமரி சிறப்புநிலைப் பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் சைக்கிள்களை வழங்கினாா்.
தலைமை ஆசிரியை திரேஷ் தேன்மொழி, உதவித் தலைமை ஆசிரியை பிரசன்னா, பேரூராட்சி துணைத் தலைவா் ஜெனஸ் மைக்கேல், கவுன்சிலா்கள் அல்பினோ ஆனந்த், இக்பால், ஆனிரோஸ், வினிற்றா, சகாய சா்ஜினாள், டெல்பின், சிவசுடலைமணி, இந்திரா, ராயப்பன், முன்னாள் கவுன்சிலா் டி. தாமஸ், திமுக நிா்வாகிகள் எஸ். அன்பழகன், எஸ். தாமஸ் ஷியாம், ஆன்றனி பிரைட்டன், ரூபின், சகாய ஆன்றனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.