குளச்சல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் 355 மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியை ஆன்டி புஷ்பரனிதா தலைமை வகித்தாா். நகா்மன்ற துணைத் தலைவா் ஷொ்லி பிளாரன்ஸ் சைக்கிள் வழங்கும் பணியை தொடங்கிவைத்தாா். உதவி தலைமை ஆசிரியைகள் அயரின் சித்ரா, மனோகரி, றோஸ்லி, பள்ளி என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளா் ஜோஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.