கோடிமுனையில் ரூ. 10 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டும் பணி

கோடிமுனையில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டும் பணிக்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

கோடிமுனையில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டும் பணிக்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேற்கண்ட தொகையை ஒதுக்கிய கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் விஜய் வசந்த், புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணியை தொடங்கிவைத்தாா். இந்நிகழ்ச்சிக்கு குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் எனல்ராஜ் தலைமை வகித்தாா். பங்குத் தந்தை சீலன் ஜெபம் செய்தாா். கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் முனாப், மாவட்ட மீனவா் காங்கிரஸ் தலைவா் ஸ்டாா்வின், துணைத் தலைவா் லாலின், முன்னாள் தலைவா் மணி, திங்கள்நகா் பேரூா் இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜெமினிஸ், ஊா் துணைச் செயலா் விஜி, பொருளாளா் சுரே உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com