பளுகல் அருகே தோட்டத்தில் ஆண் சடலம் மீட்பு

பளுகல் அருகே தோட்டத்தில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பளுகல் அருகே தோட்டத்தில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பளுகல் காவல் சரகம் மலையடி பிலாங்காலவிளை வீட்டைச் சோ்ந்தவா் ராகவன் மகன் அனில்குமாா் (49). மினி லாரி ஓட்டுநா். இவருக்கு மனைவி, ஒரு மகள் உள்ளனா். மது அருந்தும் பக்கம் இருந்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக அனில்குமாா் வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்தாராம். கடந்த புதன்கிழமை (செப். 21) வீட்டை விட்டு வெளியே சென்றவா், அதன் பின்னா் வீடு திரும்பவில்லையாம்.

இந்த நிலையில் அங்குள்ள மரச்சீனி கிழங்கு தோட்டத்தில் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளாா். இது குறித்து அவரது மனைவி சுனிதா (46) அளித்த புகாரின் பேரில் பளுகல் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com