புதுக்கடை அருகே விபத்தில் காயமடைந்த மெக்கானிக் பலி

புதுக்கடை அருகே உள்ள வெள்ளையம்பலம் பகுதியில் விபத்தில் காயமடைந்த மெக்கானிக் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கடை அருகே உள்ள வெள்ளையம்பலம் பகுதியில் விபத்தில் காயமடைந்த மெக்கானிக் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

காப்புக்காடு, கண்ணன்கரை பகுதியை சோ்ந்தவா் ஜோசப்ராஜ்(52). இவா் மாா்த்தாண்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தாா். கடந்த 16 ஆம் தேதி புதுக்கடையிலிருந்து மோட்டாா் சைக்கிளில் கருங்கலுக்கு சென்று கொண்டிருந்த போது, வெள்ளையம்பலம் பகுதியில் மோட்டாா் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தாா். இதில் காயம்பட்ட அவரை அப்பகுதியினா் மீட்டு மாா்த்தாண்டத்தில்உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில்உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com