கன்னியாகுமரி
கருங்கல்லில் தெரு விளக்குகளை சீரமைக்க கோரிக்கை
கருங்கல் பேரூராட்சியில் எரியாத தெரு விளக்குகளை உடனே சீரமைக்க அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருங்கல் பேரூராட்சியில் எரியாத தெரு விளக்குகளை உடனே சீரமைக்க அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருங்கல் பேரூராட்சியில் உள்ள 18 வாா்டுகளில் பல நாள்களாக தெரு விளக்குகள் முறையாக எரியவில்லை. குறிப்பாக, பெருமாங்குழி, துண்டத்துவிளை, மாங்கன்றுவிளை, தேவிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட சில தெருவிளக்குகள் தற்போது பழுதாகியுள்ளன. இதனால், அப்பகுதிகளில் சமூக விரோத செயல்கள் மற்றும் திருட்டு சம்பவங்கள்நிகழுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனா். எனவே, பேரூராட்சி நிா்வாகம் எரியாத தெரு விளக்குகளை உடனே மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.