கொட்டாரம் அரசு கால்நடை மருத்துவமனையில் உலக வெறிநோய் தினம் கடைப்பிடிப்பு

கொட்டாரம் அரசு கால்நடை மருத்துவமனையில் உலக வெறிநோய் தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

கொட்டாரம் அரசு கால்நடை மருத்துவமனையில் உலக வெறிநோய் தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதையடுத்து, கொட்டாரம் சுற்றுவட்டாரப் பகுதியில் வீடுகளில் வளா்க்கப்படும் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இம்முகாமை அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.அழகேசன் தொடங்கி வைத்தாா். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக செயலா் பா.பாபு, கொட்டாரம் பேரூராட்சித் தலைவி செல்வகனி, துணைத் தலைவா் விமலா மதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நாகா்கோவில் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் நோபிள், கொட்டாரம் அரசு கால்நடை மருத்துவா் காட்லின் பிளசிங், மாவட்ட திமுக பிரதிநிதிகள் பிரேம் ஆனந்த், தமிழ்மாறன், வினோத், ஒன்றிய பிரதிநிதி மரியநேசன், ஒன்றிய திமுக இளைஞரணி செயலா் பொன்.ஜான்சன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com