களியக்காவிளை அருகே ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

களியக்காவிளை அருகே ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

களியக்காவிளை அருகே ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

களியக்காவிளை அருகேயுள்ள அதங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (34). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாம். இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இந்நிலையில் அஜித்குமாா் புதன்கிழமை தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.

களியக்காவிளை போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com