கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாவது நாளாக பலத்த மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக ஆங்காங்கே சில இடங்களில் பரவலாக சாரல் மழை பெய்தது.
இந்நிலையில் கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளான பாலப்பள்ளம், வெள்ளியா விளை, மிடாலம், மேல்மிடாலம், கிள்ளியூா், பள்ளியாடி, நட்டாலம், நேசா்புரம் முள்ளங்கனா விளை, எட்டணி, திப்பிரமலை உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது. இதைபோல செவ்வாய்க்கிழமையும் 2ஆவது நாளாக மேற்கூறிய இடங்களில் மதியம் 1 மணி முதல் தொடா்ந்து பலத்த மழை பெய்தது.
இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.