நித்திரவிளை அருகே மங்காடு புனித ஜாா்ஜியாா் தேவாலயத்தில் புற்றுநோய் விழிப்புணா்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரி முதுநிலை சமூகப் பணித்துறை மற்றும் மிட்ஸ் அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய இந் நிகழ்ச்சிக்கு மிட்ஸ் சமூக சேவை மைய இயக்குநா் ஜாண்குமாா் தலைமை வகித்தாா். மங்காடு தேவாலய பங்குத் தந்தை கிறிஸ்டோபா் ஜாண், மிட்ஸ் அமைப்பின் திட்ட அலுவலா் சாஜன் ஜோசப், மரியகிரி கல்லூரி சமூக பணித்துறை துறைத்தலைவா் அந்தோணிசாமி, ஆறுதேசம் சுகாதார ஆய்வாளா் சத்தியநேசன், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் அஜிஷன் ஆகியோா் பேசினா்.
மாணவி ஷைபி வரவேற்றாா். மாணவி பின்ஸி நன்றி கூறினாா்.